மத்தியப்பிரதேசத்தில் 11 பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் செயல்பட்டு வரும் 11 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வழியாக ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி முதல்வர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர். அதே சமயம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் விடுக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட 11 பள்ளி கூடங்களுக்கும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழுவினர் வரவழைக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் விரிவான சோதனை நடத்தப்பட்டது.
இதில், எந்தவொரு பள்ளி கூடத்தில் இருந்தும் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.